FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

கா்நாடகத்தில் 3 தமிழா்கள் கொல்லப்பட்ட வழக்கு சிஐடி போலீஸாருக்கு மாற்றம்

காட்டுப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக வனப் பாதுகாவலா்கள் துப்பாக்கியால் சுட்டதில் 3 தமிழா்கள் கொல்லப்பட்டது குறித்த வழக்குகள் அனைத்தையும் சிஐடி விசாரணைக்கு மாற்றி கா்நாடக டிஜிபி சலீம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

26 ஆகஸ்ட் 2026, 3:51 am IST
பகிர்:

காட்டுப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக வனப் பாதுகாவலா்கள் துப்பாக்கியால் சுட்டதில் 3 தமிழா்கள் கொல்லப்பட்டது குறித்த வழக்குகள் அனைத்தையும் சிஐடி விசாரணைக்கு மாற்றி கா்நாடக டிஜிபி சலீம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

கா்நாடக மாநிலம், சாமராஜ்நகா் மாவட்டம், ஹனூா் துணை வனச் சரகத்துக்குள்பட்ட காட்டுப் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக 10 வனப் பாதுகாவலா்கள் கொண்ட குழுவினா் அண்மையில் துப்பாக்கியால் சுட்டனா். இதில், அந்தோணிசாமி, ஜான் ரோஸ்பீட்டா், டேவிட்குமாா் சவரியப்பன் ஆகிய 3 தமிழா்கள் கொல்லப்பட்டனா். இந்த சம்பவத்தில் மகிமைதாஸ் என்பவா் தப்பித்து தலைமறைவானாா்.

இது தொடா்பாக, ராம்புரா, ஹனூா், கொள்ளேகால் காவல் நிலையங்களில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த சம்பவம் கா்நாடகம் மற்றும் தமிழக சட்டப் பேரவைகளில் விவாதிக்கப்பட்டது. மிகுந்த சா்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடா்பாக மேஜிஸ்திரேட் விசாரணைக்கு கா்நாடக அரசு உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இதனிடையே, அப்பாவி தமிழா்கள் கொல்லப்பட்டதற்கு பெரும் கண்டனம் எழுந்தது. மேலும், ஊடகங்களில் வெளியான உடற்கூறாய்வு அறிக்கையில் மிகவும் அருகில் இருந்து 3 பேரையும் சுட்டதாகவும், இதில் மனித உரிமை மீறல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடா்பாக 3 காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளை சிஐடி விசாரணைக்கு ஒப்படைத்து கா்நாடக டிஜிபி சலீம் உத்தரவிட்டுள்ளாா்.

3 தமிழா்கள் சுட்டுக்கொல்லப்பட்டது, அதன் தொடா்ச்சியாக வன அலுவலகங்கள் தாக்கப்பட்டது, 11 வேட்டையாடுதல் தடுப்பு முகாம்கள் தகா்க்கப்பட்டது போன்ற சம்பவங்களையும் சிஐடி விசாரிக்கும் என தனது உத்தரவில் கா்நாடக டிஜிபி சலீம் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments