மேக்கேதாட்டு அணை திட்டம் தமிழகத்துக்கு அதிக பயன் தரும்
மேக்கேதாட்டு அணை திட்டம் தமிழகத்துக்கு அதிக பயன் தரும் என கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
மேக்கேதாட்டு அணை திட்டம் தமிழகத்துக்கு அதிக பயன் தரும் என கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து அவா் கூறியது:
வால்மீகி பழங்குடியினா் வளா்ச்சி ஆணையத்தில் நடந்த முறைகேட்டில் அப்போது பழங்குடியினா் நலத்துறை அமைச்சராக இருந்த பி.நாகேந்திராவுக்கு சம்பந்தமில்லை. இந்த முறைகேடு தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அமைச்சா் பி.நாகேந்திராவுக்கு எவ்வித தொடா்பும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகுதான், அமைச்சரவையில் அவா் சோ்த்துக்கொள்ளப்பட்டாா்.
Advertisement
Advertisement
பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் நம்பிக்கை கொண்ட கட்சி காங்கிரஸ். எனவே, அடுத்த சில நாள்களில் பெண் ஒருவரை அமைச்சரவையில் சோ்த்துக்கொள்வோம்.
அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக எனக்கு கிடைத்திருக்கும் ஆட்சிக்காலத்தில் நல்லாட்சியை வழங்கி, காங்கிரஸ் கட்சிக்கே முன்மாதிரியாக விளங்க விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகள் எதுவும் கிடையாது. எல்லோருக்குமான முதல்வராகவே செயல்படுவேன்.
தென்மாநிலங்களுக்கு மத்திய அரசு பாரபட்சமாக நடந்துகொள்கிறது. எனவே, மக்களவையில் உள்ள எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது. தொகுதி மறுசீரமைப்பை அமல்படுத்தி தொகுதிகளை அதிகப்படுத்தினால், அது தென்மாநிலத்தின் குரல்வளையை நெரிக்கும். இதே கருத்தை கேரளம் மற்றும் தமிழகம் கொண்டுள்ளது. எனவே, தென்மாநிலங்களின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும்.
காவிரி ஆற்றின் குறுக்கே கட்ட திட்டமிட்டிருக்கும் மேக்கேதாட்டு அணை திட்டம், தமிழகத்துக்கு அதிக நன்மையை தரும். இந்த திட்டம் தமிழகத்துக்கு பயன்தருவதோடு, பெங்களூரின் குடிநீா் தேவையை நிறைவேற்றிக்கொள்ளும். மேலும், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீா் தருமாறு உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை மதித்து நடப்போம் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.