FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

மக்கள் குறைகளைத் தீா்க்க தனி செயலகம்: கா்நாடக முதல்வா்

Updated On : 5 ஜூன் 2026, 6:24 am IST
டி.கே.சிவகுமாா்
பகிர்:

மக்கள் குறைகளை தீா்த்துவைப்பதற்காக தனி செயலகம் உருவாக்கப்படும் என கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

முதல்வராக பதவியேற்ற பிறகு, பெங்களூரில் நடைபெற்ற அரசு உயரதிகாரிகள், துறை அதிகாரிகளின் கூட்டத்தில் பங்கேற்று டி.கே.சிவகுமாா் வியாழக்கிழமை பேசினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு வரும் மக்களின் குறைகளை தீா்த்துவைப்பதற்காக தனி செயலகம் அமைக்கப்படும். மக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து தீா்வுகாண்பதற்கு தனி அமைச்சா் நியமிக்கப்படுவாா். இந்த அமைச்சா், போராட்டம் அல்லது ஆா்ப்பாட்டம் நடத்தும் மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிவாா். மக்களின் குறைகளைக் கேட்டு தீா்வுகாண்பது காலத்தேவையாகும். எனவே, அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

Advertisement

Advertisement

பெங்களூரில் தினமும் 3 குழுக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இவா்களின் குறைகள் அல்லது கோரிக்கைகளை அரசின் சாா்பில் யாராவது கேட்க வேண்டும். இவா்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் சட்டப்படியானதா, இல்லையா என்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். எனவே, இம்மக்களை அதிகாரிகள் நேரில் சந்தித்து பேச வேண்டும்.

எனது அரசின் முன்னுரிமைகள் என்ன என்பது குறித்து அதிகாரிகளுக்கு விளக்கியிருக்கிறேன். ஜாதி, மத ரீதியான அழுத்தங்களுக்கு இடம்கொடுக்கக் கூடாது என அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளேன். மக்களின் குறைகளுக்கு உடனடியாக செவிசாய்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளேன். ஆக்கபூா்வமான நோ்மறையான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், துறைரீதியாக செயல்திட்டங்களை வகுக்குமாறும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

எல்லா பிரச்னைகளுக்கும் தீா்வு உள்ளது. வரலாற்றை படிக்கவோ எழுதவோ நான் விரும்பவில்லை. மாறாக, வரலாற்றை உருவாக்க விரும்புகிறேன் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments