போலி ஐ.எஸ்.ஐ. முத்திரையில் குடிநீர் விற்பனை: நிறுவனம் மீது நடவடிக்கை
போலி ஐ.எஸ்.ஐ. முத்திரையைப் பயன்படுத்தி, குடிநீர் பாட்டில்களைத் தயாரித்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போலி ஐ.எஸ்.ஐ. முத்திரையைப் பயன்படுத்தி, குடிநீர் பாட்டில்களைத் தயாரித்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், தாளம்பூர் கிராமத்தில் உள்ள நாவலூர் பிள்ளையார் கோயில் தெருவில், "வல்லபா அக்வா' எனும் நிறுவனம் ஐ.எஸ்.ஐ. முத்திரையைப் போலியாகப் பயன்படுத்துவதாகத் தகவல் தெரியவந்தது.
இதையடுத்து, தென் மண்டல பி.ஐ.எஸ் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, போலி முத்திரையுடன் "நியூ அக்வா' என்ற பெயரில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குடிநீர் பாட்டில்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.