இந்திய தர நிர்ணய நிறுவன வழக்குரைஞர் நியமனம்
இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்.) சார்பில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் ஆஜராக வழக்குரைஞர் மூ.பழநிமுத்து நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்.) சார்பில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் ஆஜராக வழக்குரைஞர் மூ.பழநிமுத்து நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய தர நிறுவனம், மத்திய அரசின் உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் கீழ், நுகர்வுப் பொருள்கள் மற்றும் பல்வேறு நுகர்வோர் சேவைகளின் தரச்சான்று நிர்ணயம், தரச் சான்று அளித்தல் மற்றும் கண்காணிப்பு ஆகிய பணிகளைச் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னையில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் வழக்காட வழக்குரைஞர் மூ.பழநிமுத்துவை நியமித்துள்ளது. இவர் விமான நிலையங்கள் ஆணையம், சென்னைத் துறைமுகம், எஸ்பிஐ மற்றும் ஐஓபி வங்கி ஆகியவற்றின் வழக்குரைஞராக ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.