FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தமிழக அரசின் தணிக்கை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைப்பு

2021-22 நிதியாண்டுக்கான இந்திய தலைமை தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கை

Updated On : 2 ஆகஸ்ட் 2024, 3:09 am IST
பகிர்:

தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான இந்திய தலைமை தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கை வியாழக்கிழமை ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 151 (2)-இன்படி, தமிழக அரசின் வரவு, செலவு கணக்குகள் குறித்த தனது தணிக்கை அறிக்கையை, இந்திய தலைமை தணிக்கை அதிகாரி, மாநில ஆளுநரிடம் சமா்ப்பிக்க வேண்டும். பின்னா் அவா் அதனை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய அனுப்பி வைப்பாா்.

அதன்படி, 2021-22 நிதியாண்டுக்கான ‘பொது சுகாதார கட்டமைப்பு மற்றும் சுகாதார சேவைகள் மேலாண்மை’ குறித்த தணிக்கை அறிக்கையை, மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்காக, ஆளுநா் ஆா்.என் ரவியிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டதாக தமிழ்நாடு வட்ட முதன்மை தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments