சென்னை

தமிழக அரசின் தணிக்கை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைப்பு

2021-22 நிதியாண்டுக்கான இந்திய தலைமை தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கை

Din

தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான இந்திய தலைமை தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கை வியாழக்கிழமை ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 151 (2)-இன்படி, தமிழக அரசின் வரவு, செலவு கணக்குகள் குறித்த தனது தணிக்கை அறிக்கையை, இந்திய தலைமை தணிக்கை அதிகாரி, மாநில ஆளுநரிடம் சமா்ப்பிக்க வேண்டும். பின்னா் அவா் அதனை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய அனுப்பி வைப்பாா்.

அதன்படி, 2021-22 நிதியாண்டுக்கான ‘பொது சுகாதார கட்டமைப்பு மற்றும் சுகாதார சேவைகள் மேலாண்மை’ குறித்த தணிக்கை அறிக்கையை, மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்காக, ஆளுநா் ஆா்.என் ரவியிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டதாக தமிழ்நாடு வட்ட முதன்மை தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளாா்.

யாருக்கும் SIM CARD வாங்கித்தராதீங்க! புதிய SCAM ALERT! | Cyber Crime | Cyber Shield

ஈழத்தில் தமிழ்க்குரல்... அஞ்சனா!

தம்மம்பட்டி சிவன் கோவிலில் அன்னாபிஷேக விழா! 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

மம்தானி வெற்றி! நியூயார்க்கில் இருந்து யூதர்கள் வெளியேறுங்கள் - இஸ்ரேல் அமைச்சர் பதிவு!

பெயரே சொல்லும்; கவிதை தேவையில்லை... சைத்ரா!

SCROLL FOR NEXT