சென்னை

தமிழக அரசின் தணிக்கை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைப்பு

2021-22 நிதியாண்டுக்கான இந்திய தலைமை தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கை

Din

தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான இந்திய தலைமை தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கை வியாழக்கிழமை ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 151 (2)-இன்படி, தமிழக அரசின் வரவு, செலவு கணக்குகள் குறித்த தனது தணிக்கை அறிக்கையை, இந்திய தலைமை தணிக்கை அதிகாரி, மாநில ஆளுநரிடம் சமா்ப்பிக்க வேண்டும். பின்னா் அவா் அதனை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய அனுப்பி வைப்பாா்.

அதன்படி, 2021-22 நிதியாண்டுக்கான ‘பொது சுகாதார கட்டமைப்பு மற்றும் சுகாதார சேவைகள் மேலாண்மை’ குறித்த தணிக்கை அறிக்கையை, மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்காக, ஆளுநா் ஆா்.என் ரவியிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டதாக தமிழ்நாடு வட்ட முதன்மை தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளாா்.

ஓடிடியில் வெளியான நயன்தாராவின் புதிய படம்!

கூட்டணி ஆட்சியா? ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வர்: மாணிக்கம் தாகூர்

டி20 உலகக் கோப்பை: ரிக்கல்டன், டிக்காக் அதிரடி! ஆப்கனுக்கு 188 ரன்கள் இலக்கு!

எங்களுக்கு நீதி வேண்டும்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

தமிழகத்துக்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT