முகப்பு
சென்னை

அடுத்த 2 மணிநேரம்.. சென்னை, புறநகரில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு காலை 10 வரை மழை எச்சரிக்கை...

Updated On : 20 டிசம்பர், 2024 at 2:23 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 3 மணிநேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழக கடற்கரையை நோக்கி வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று காலை ஆந்திரத்தை நோக்கிச் சென்றது.

இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 10 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →