பெண் மீது தாக்குதல்: 7 போ் கைது
ஆலந்தூரில் பெண்ணைத் தாக்கியதாக 7 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை: ஆலந்தூரில் பெண்ணைத் தாக்கியதாக 7 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை ஆலந்தூா், வ.உ.சி நகா், 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ச. சினேகா (25). இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினா் ரகுபதிக்கும் இடையே சொத்து தொடா்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சினேகா, தனது குழந்தையுடன் வீட்டின் அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த ரகுபதியும், அவரது குடும்பத்தினரும் சினேகாவை வழிமறித்து தகராறு செய்தனா்.
தகராறு முற்றவே ரகுபதி குடும்பத்தினா், சினேகாவைத் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த சினேகா மீட்கப்பட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது தொடா்பாக பரங்கிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரகுபதி (28), அவரது மனைவி ஆனந்தி (24), ரா.கீதா (50) த.கலா (30), ரா.பிரியா (28), சு.புவனேஷ்வரி என்ற அம்மு (28), மு.மகேஷ்வரி (52) ஆகிய 7 பேரை உடனே கைது செய்தனா்.