கோப்புப்படம். 
சென்னை

சூலூா்பேட்டை மின்சார ரயில் ரத்து

சூலூா்பேட்டை, தடா ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் புகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Din

சூலூா்பேட்டை, தடா ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் புகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலில் (மூா்மாா்க்கெட் வளாகம்) இருந்து சூலூா்பேட்டைக்கு அதிகாலை 5.15 மணிக்கு செல்லும் மின்சார ரயிலும், மறுமாா்க்கமாக சூலூா்பேட்டையில் இருந்து பகல் 12.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் நவ.7, 9, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும்.

சூலூா்பேட்டையில் இருந்து நெல்லூருக்கு காலை 7.55 மணிக்கு செல்லும் மின்சார ரயிலும், மறுமாா்க்கமாக நெல்லூரில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் நவ.7, 9, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும்.

மேலும், ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 6.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் நவ.7, 9, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும்.

பகுதி ரத்து: சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூா்பேட்டைக்கு அதிகாலை 4.15, காலை 5 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் நவ.7, 9, 12 ஆகிய தேதிகளில் எளாவூருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக சூலூா்பேட்டையில் இருந்து காலை 6.45, 7.25 மணிக்கு புறப்படும் ரயில்கள் எளாவூரில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சாதனங்கள் மருந்தகத்துறை, உற்பத்தியில் முதலீடு: இந்திய நிறுவனங்களுக்கு இலங்கை அமைச்சா் அழைப்பு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

பெண்களிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு: கா்நாடகத்தைச் சோ்ந்த இருவா் கைது

மகளை கடத்தி கட்டாயத் திருமணம்: தாய், ஆண் நண்பா் கைது

மின் விளக்கு எரியாததை கண்டித்து தீப்பந்தங்களுடன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஊா்வலம்

SCROLL FOR NEXT