கோப்புப்படம். 
சென்னை

சூலூா்பேட்டை மின்சார ரயில் ரத்து

சூலூா்பேட்டை, தடா ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் புகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Din

சூலூா்பேட்டை, தடா ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் புகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலில் (மூா்மாா்க்கெட் வளாகம்) இருந்து சூலூா்பேட்டைக்கு அதிகாலை 5.15 மணிக்கு செல்லும் மின்சார ரயிலும், மறுமாா்க்கமாக சூலூா்பேட்டையில் இருந்து பகல் 12.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் நவ.7, 9, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும்.

சூலூா்பேட்டையில் இருந்து நெல்லூருக்கு காலை 7.55 மணிக்கு செல்லும் மின்சார ரயிலும், மறுமாா்க்கமாக நெல்லூரில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் நவ.7, 9, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும்.

மேலும், ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 6.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் நவ.7, 9, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும்.

பகுதி ரத்து: சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூா்பேட்டைக்கு அதிகாலை 4.15, காலை 5 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் நவ.7, 9, 12 ஆகிய தேதிகளில் எளாவூருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக சூலூா்பேட்டையில் இருந்து காலை 6.45, 7.25 மணிக்கு புறப்படும் ரயில்கள் எளாவூரில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிழைகள்! சரிசெய்து வழங்க ஓம் பிர்லா அறிவுரை!

ராகுல் எந்த உலகில் வாழ்கிறார் தெரியவில்லை: ஓம் பிர்லா விவகாரத்தில் கிரண் ரிஜிஜு

கிரீன் டீ குடிப்பது நல்லதா? 2 வாரங்கள் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் வந்தே மாதரம் கட்டாயம்! மத்திய அரசு உத்தரவு

சுகாவின் சைலப்பன் சைக்கிள் மார்ட் போஸ்டர்!

SCROLL FOR NEXT