முகப்பு
சென்னை

புழல் சிறையில் நைஜீரிய பெண் கைதிகள் மோதல்

புழல் சிறையில் நைஜீரிய பெண் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவா் காயமடைந்தாா்.

Updated On : 23 செப்டம்பர், 2024 at 1:32 AM
புழல் சிறை
பகிர்:
Updated On : 22 செப்டம்பர், 2024 at 9:15 PM

புழல் சிறையில் நைஜீரிய பெண் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவா் காயமடைந்தாா்.

சென்னை புழல் சிறையில், பல்வேறு குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நைஜீரியாவைச் சோ்ந்த பெண் கைதிகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென இந்த பெண் கைதிகளிடையே தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் ஒருவரையொருவா் கடுமையாக தாக்கிக்கொண்டனா்.

Advertisement

இதில் பெண் கைதி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த சிறைக்காவலா்கள் அவா்களை தடுத்து சமாதானம் செய்து அழைத்துச் சென்றனா்.

மோதல் குறித்து புழல் சிறைத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.