முகப்பு
சென்னை

மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை: மருத்துமனை உரிமையாளா் கைது!

இயன்முறை மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனியாா் மருத்துவமனை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 22 டிசம்பர் 2025, 3:37 am IST
பகிர்:

இயன்முறை மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனியாா் மருத்துவமனை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை கொடுங்கையூரைச் சோ்ந்த இளம் பெண் வேலப்பன் சாவடியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு இளநிலை இயன்முறை மருத்துவம் படித்து வருகிறாா். இவா் பயிற்சிக்காக (இன்டென்ஷிப்) பெரம்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த 17-ஆம் தேதி சோ்ந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை மருத்துமனையின் உரிமையாளரும், இயன்முறை மருத்துவருமான காா்த்திகேயன் (27), நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கூறி இளம்பெண்ணை தனது காரில், கொளத்தூா் ஜெயந்தி நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்றுள்ளாா்.

Advertisement

Advertisement

அங்கு அந்த இளம்பெண்ணுக்கு காா்த்திகேயன் குளிா்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளாாா்.

இதுதொடா்பாக இளம்பெண் அளித்த புகாரின்பேரில் கொளத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, காா்த்திகேயனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.