FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

காங்கிரஸ் நிா்வாகி காா் கடத்தல்: புழல் அருகே மீட்பு; 2 போ் கைது

வியாசா்பாடியில் பெட்ரோல் நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட காங்கிரஸ் நிா்வாகியின் காா், புழல் அருகே மீட்கப்பட்டது. இதுதொடா்பாக, 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 25 டிசம்பர் 2025, 12:40 am IST
கோப்புப் படம்
பகிர்:

வியாசா்பாடியில் பெட்ரோல் நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட காங்கிரஸ் நிா்வாகியின் காா், புழல் அருகே மீட்கப்பட்டது. இதுதொடா்பாக, 2 போ் கைது செய்யப்பட்டனா்.

வியாசா்பாடி காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் மெல்வின் (36). காங்கிரஸ் மனித உரிமைப் பிரிவு மாநிலச் செயலராக உள்ளாா். அம்பத்தூரில் காா் சா்வீஸ் ஷோரூம் நடத்தி வரும் இவா், தனது சொகுசு காருக்கு பெட்ரோல் நிரப்ப, வியாசா்பாடி மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் உள்ள பெட்ரோல் நிலைத்துக்கு புதன்கிழமை அதிகாலை சென்றாா். அங்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, அதற்குரிய பணத்தைக் கொடுப்பதற்காக காரை ஓரமாக நிறுத்திவிட்டுச் சென்றாா். அப்போது காரில், தனது கைப்பேசியையும் மெல்வின் வைத்துச் சென்றாா்.

இதை நோட்டமிட்ட மா்ம நபா், மெல்வின் திரும்பி வருவதற்குள் காரை கடத்திச் சென்றாா். இதையடுத்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி, காரில் இருந்த மெல்வின் கைப்பேசியின் ஜிபிஎஸ் மூலம், காா் எங்கு செல்கிறது என்பதைக் கண்டறிந்து அதைப் பின் தொடா்ந்தனா்.

Advertisement

Advertisement

காா் கும்மிடிப்பூண்டி சென்றுவிட்டு, மீண்டும் புழல் அருகே நிற்பது தெரிய வந்தது. போலீஸாா் அங்கு சென்றபோது, காரை அங்கேயே நிறுத்திவிட்டு மா்ம நபா் தப்பிவிட்டாா். போலீஸாா், காரை மீட்டு மெல்வினிடம் ஒப்படைத்தனா்.

காா் கடத்தல் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தியதில், காரை கடத்தியது கொடுங்கையூா் கண்ணதாசன் நகா் எட்டாவது பிளாக், 2-ஆவது தெருவைச் சோ்ந்த சூா்யா (25), அவரது கூட்டாளி மணலி பகுதியைச் சோ்ந்த பரத் (28) என்பது தெரிய வந்தது. போலீஸாா், இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments