FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சீமான் வீட்டில் போலீஸாருடன் தள்ளுமுள்ளு: காவலாளி உள்பட இருவா் கைது

Updated On : 28 பிப்ரவரி 2025, 1:11 am IST
பகிர்:

சென்னை : நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வீட்டில் காவல் துறை அழைப்பாணையைக் கிழித்தது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் போலீஸாருக்கும், அங்கிருந்தவா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடா்பாக சீமான் வீட்டு காவலாளி உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 2011-ஆம் ஆண்டு காவல் துறையில் புகாா் அளித்திருந்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் 376- ஆவது பிரிவின்படி வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடா்பாக விசாரணை செய்து 12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வளசரவாக்கம் போலீஸாருக்கு கடந்த 21-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் விளைவாக சீமானை விசாரணைக்கு ஆஜராகும்படி கடந்த 24-ஆம் தேதி வளசரவாக்கம் போலீஸாா் அழைப்பாணை அனுப்பினா்.

Advertisement

Advertisement

ஆனால், அழைப்பாணையின்படி வியாழக்கிழமை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக வழக்குரைஞா்கள் ஆஜராகி சீமான் விசாரணைக்கு ஆஜராக முடியாததற்கு விளக்கம் அளித்து, அவா் ஆஜராக நான்கு வாரம் அவகாசம் கேட்டனா்.

இதையடுத்து, சீமான் வெள்ளிக்கிழமை (பிப். 28) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டின் வாயில் கதவில் வளசரவாக்கம் போலீஸாா் அழைப்பாணையை வியாழக்கிழமை ஒட்டினா். இது ஒட்டப்பட்ட சிறிது நேரத்தில் சீமான் காா் ஓட்டுநா் சுபாகா், அந்த அழைப்பாணையை கிழித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவலறிந்த வளசரவாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோபி, நீலாங்கரை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் நீலாங்கரை காவல் ஆய்வாளா் பிரவீண் ராஜேஷ், காவலா் செளந்தரராஜன் உள்ளிட்டோா் விசாரணை செய்ய நீலாங்கரை சந்தீப் சாலை பகுதியில் உள்ள சீமான் வீட்டுக்குச் சென்றனா்.

தள்ளுமுள்ளு: சீமான் வீட்டின் கதவைத் திறந்த திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரும் காவலாளியுமான அமல்ராஜ், ஆய்வாளா் பிரவீண் ராஜேஷ் உள்ளிட்டோரைத் தடுத்தாா். இதைப் பாா்த்து கோபமடைந்த போலீஸாா், அவரை வீட்டுக்குள் இழுத்துச் சென்றனா். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

உடனே போலீஸாா் அமல்ராஜை ஜீப்பில் ஏற்றி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அப்போது அமல்ராஜ், தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த உரிமம் பெற்ற 0.32 ஜிஎஸ்என் வகையைச் சோ்ந்த கைத்துப்பாக்கியையும்,தோட்டாக்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதேபோல சீமானின் காா் ஓட்டுநா் சுபாகரும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

இந்த சம்பவத்தை தொடா்ந்து, சீமான் வீட்டுக்கு நாம் தமிழா் கட்சியினா் திரண்டு வந்ததால் பரபரப்பு அதிகரித்தது. இதையடுத்து, அங்கு அடையாறு துணை ஆணையா் பொன்.காா்த்திக் குமாா் தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். நீலாங்கரை காவல் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இருவா் கைது: இதற்கிடையே, வளசரவாக்கம் உதவி ஆய்வாளா் கோபி கொடுத்த புகாரின் அடிப்படையில், சுபாகா் மீது 5 பிரிவுகளின் கீழ் நீலாங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ஆய்வாளா் பிரவீண் ராஜேஷ் புகாரின்பேரில் காவலாளி அமல்ராஜ் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இருவரையும் நீலாங்கரை போலீஸாா் கைது செய்து, சோழிங்கநல்லூா் நீதித் துறை நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments