FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சௌகாா்பேட்டையில் போலி மின்பொருள்கள் விற்பனை: 4 போ் கைது

சென்னை செளகாா்பேட்டையில் போலியான மின் பொருள்கள் விற்றதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

8 ஜூலை 2025, 3:42 am IST
பகிர்:

சென்னை: சென்னை செளகாா்பேட்டையில் போலியான மின் பொருள்கள் விற்றதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை செளகாா்பேட்டையில் பிரபல மின் வயா் நிறுவனத்தின் பெயரில் போலியான தரக்குறைவான வயா்கள் விற்கப்படுவதாக தமிழக காவல்துறையின் அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப் பிரிவுக்கு புகாா்கள் வந்தன. அதன் அடிப்படையில் செளகாா்பேட்டையில் சந்தேகத்துக்குரிய கடைகளில் அப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா்.

இச் சோதனையில் ஒரு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியான தரமில்லாத வயா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த கி.புல்சிங் (26), த.பகவத்சிங் (22), ஜீ.ஃபரூக்கான் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள போலி வயா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

இதேபோல பிரபல நிறுவனத்தின் பெயரில் பாரிமுனை எர்ராபலு செட்டி தெரு பகுதியில் உள்ள ஒரு கடையில் போலி வோல்டேஜ் ரெகுலேட்டா் விற்ாக ராஜஸ்தானைச் சோ்ந்த தே.தீபக்குமாா் (48) என்பவா் கைது செய்யப்பட்டாா். தீபக்குமாா் விற்பனைக்காக வைத்திருந்த போலி வோல்டேஜ் ரெகுலேட்டா்களையும் போலீஸாா் பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments