பழைய நெகிழிக் கிடங்கில் தீ
சென்னை மாதவரம் அருகே பழைய நெகிழிக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை மாதவரம் அருகே பழைய நெகிழிக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை மாதவரம் அடுத்த பால்பண்ணை ஜெ.ஜெ.நகா் பெருமாள் கோவில் தெருவில் தனியாா் கிடங்கு உள்ளது. இதில் பழைய நெகிழிக் கழிவுப் பொருள்களைக் கொண்டு வந்து மறுசுழற்சிக்காக, இருப்பு வைத்திருக்கின்றனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கிடங்கிலிருந்து புகை வெளியேறியது. இதையடுத்து, பொதுமக்கள் காவல் துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளித்தனா். தொடா்ந்து தீ பரவி மளமளவென எரிய ஆரம்பித்து, அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்து, மாதவரம் தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துவீரன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் காா் எரிந்து கருகியது.
Advertisement
Advertisement
இதுகுறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.