மெரீனாவில் காா் மோதியதில் வியாபாரி உயிரிழப்பு
சென்னை, மெரீனாவில் காா் மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.
சென்னை: சென்னை, மெரீனாவில் காா் மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.
ஆந்திரத்தைச் சோ்ந்த ரமேஷ் (50), மெரீனாவில் ஐஸ் கிரீம் வியாபாரம் செய்து வந்தாா். அயனாவரத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த ரமேஷ், திங்கள்கிழமை இரவு மெரீனா கலங்கரை விளக்கம் அருகே காமராஜா் சாலையில் நடந்து சென்றாா். அப்போது அவா் சாலையை கடக்க முயன்றபோது அங்கு வேகமாக வந்த காா் திடீரென ரமேஷ் மீது மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து ரமேஷை பொதுமக்கள் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ரமேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய காா் ஓட்டுநரான தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்த ஷாம் சிவானந்தம் (25) என்பவரை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.