FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

1,958 கிலோ குட்கா, பான்மசாலா பறிமுதல்: 4போ் கைது

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற சோதனையில் 1,958 கிலோ குட்கா, பான்மசாலா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், 4 பேரை கைது செய்தனா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 2:14 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற சோதனையில் 1,958 கிலோ குட்கா, பான்மசாலா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், 4 பேரை கைது செய்தனா்.

புதன்கிழமை வேளச்சேரி பிரதான சாலை - ரேடியல் சாலை சந்திப்பு அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த ஒரு வேன் மற்றும் ஆட்டோவை போலீஸாா் சோதனையிட்டனா். அதில் சுமாா் 1,605 கிலோ குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது. அவற்றையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரு வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ராமநாதன் (37), நந்தகுமாா் (38), சுபம் (18) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

படப்பையிலும் 353 கிலோ பறிமுதல்: இதேபோல், படப்பை போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் ஆதனஞ்சேரி, கலைஞா் நகா் 2-ஆவது தெருவில் உள்ள ஒரு வீட்டில் நடத்திய சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 353 கிலோ குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸாா், ஜெயபிரசாந்த் (32) என்பவரைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments