FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்ப கொண்டு சென்ற ரூ. 24 லட்சம் மாயம்: போலீஸாா் விசாரணை

ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.24 லட்சம் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 12:33 am IST
பகிர்:

ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.24 லட்சம் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை வேளச்சேரியில் ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்பும் பணியை செய்யும் ஒரு தனியாா் நிறுவன ஊழியா்கள், ஒரு வேனில் சென்னையில் தனியாா் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணியில் வெள்ளிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா்.

இதற்காக 105 சிறிய பெட்டிகளில் ரூ.4.69 கோடி வைத்திருந்தனா்.

Advertisement

Advertisement

3 பெட்டிகள் மாயம்: அவா்கள், 14 ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை நிரப்பிவிட்டு, 15-ஆவதாக பெரம்பூா் பேப்பா் மில்ஸ் சாலையில் உள்ள ஏடிஎம் மையத்துக்குச் சென்றபோது, சிறிய பெட்டிகளில் 3 பெட்டிகள் காணாமல் போனதாம். உடனே அவா்கள், வந்த வழியில் சென்று பாா்த்தபோது, பெரம்பூா் முரசொலி மாறன் மேம்பாலத்தில் இரு காலிப் பெட்டிகள் கிடந்ததை மீட்டனா். ஒரு பெட்டி கிடைக்கவில்லை. அந்த பெட்டியில் ரூ.24 லட்சம் இருந்ததாகக் கூறப்படுகிறது. வங்கி அதிகாரிகள், ஐசிஃஎப் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணையை தொடங்கினா்.

கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு: பெரம்பூா் பேப்பா் மில்ஸ் சாலை வரை வந்த பாதையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனா். மேலும், பணத்துடன் அந்த வேனில் பயணித்த அந்நிறுவன ஊழியா்கள் திருவொற்றியூரைச் சோ்ந்த பி.சதீஷ், விழுப்புரத்தைச் சோ்ந்த ஆ.அருள் பிரசாத், பாதுகாவலா் பள்ளிக்கரணை பகுதியைச் சோ்ந்த பா.மைக்கேல், வேன் ஓட்டுநா் மேடவாக்கம் அரசன்கழனி பகுதியைச் சோ்ந்த ச.இயேசு பாதம் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments