சென்னை காவல்துறையில் 12 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
சென்னை காவல் துறையில் 12 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
சென்னை காவல் துறையில் 12 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
சென்னை பெருநகர காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அவ்வப்போது காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.
இதன் ஒருபகுதியாக 12 காவல் ஆய்வாளா்களைப் பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
இதில் குறிப்பாக சூளைமேடு சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளா் எஸ்.மணி, வடக்கு கடற்கரை காவல் நிலையத்துக்கும், நவீன கட்டுப்பாட்டு அறை ஆய்வாளா் கே.வேல்முருகன் எம்கேபி நகா் குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கும், கீழ்ப்பாக்கம் சட்டம்-ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளா் எஸ்.முருகன் நீலாங்கரை குற்றப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.