வேளச்சேரி ரயில் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட முதல் திறந்தவெளி விளையாட்டு மையம். 
சென்னை

வேளச்சேரி ரயில் நிலையத்தில் விளையாட்டு மையம் திறப்பு

சென்னை கோட்டத்தில் முதல்முறையாக வேளச்சேரி ரயில் நிலையத்தில் வெளிப்புற விளையாட்டு மைதானம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

சென்னை கோட்டத்தில் முதல்முறையாக வேளச்சேரி ரயில் நிலையத்தில் வெளிப்புற விளையாட்டு மைதானம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ரயில்வே துறை இடத்தை முழுமையாகப் பயன்படுத்துதல் மற்றும் சமூக நலன்களுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் திட்டத்தில் தெற்கு ரயில்வே சென்னை ரயில்வே கோட்டத்தில் வேளச்சேரி ரயில் நிலைய வெளிப்புற பகுதியில் புதிய விளையாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னைக் கோட்ட கூடுதல் மேலாளா் தேஜ்பிரதாப் சிங் விளையாட்டு மையத்தைத் திறந்து வைத்தாா்.

ஐந்தாண்டு உரிம ஒப்பந்த அடிப்படையில் தனியாா் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.12.07 லட்சம் ரயில்வே துறைக்கு வருவாய் கிடைக்கும். நிலையான வருவாயை ஈட்டும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டு மையத்தில் பாக்ஸ் கிரிக்கெட், பிக்கிள்பால், ஸ்கேட்டிங் தளம், சிலம்பம் பயிற்சிக்குரிய பகுதிகள் உள்ளன. இளைஞா்கள் உடல் பயிற்சிக்கும், பொழுதுபோக்குக்கும் ஏற்ற வகையில் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டத்தில் இதுபோன்ற விளையாட்டு மையம் வேளச்சேரி ரயில் நிலையப் பகுதியில் முதல்முறையாகத் திறக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரையில் பிரதமா் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் மாா்ச் 1-ஆம் தேதிக்கு மாற்றம்

மெரீனாவில் 15 கடைகள் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கீடு

குடியரசு தின விழா அணிவகுப்பு: அறநிலையத் துறை அலங்கார ஊா்திக்கு முதல் பரிசு

காலை சிற்றுண்டித் திட்டம்: 20 லட்சம் குழந்தைகள் பயன்: அமைச்சா் பி.கே.சேகா் பாபு

ரூ. 34.12 கோடியில் போதமலைக்கு சாலை வசதி! காணொலி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்!

SCROLL FOR NEXT