6 ஆண்டுகளில் 10,298 பேரை மீட்ட காவல் கரங்கள்: காவல் ஆணையா் பாராட்டு
சென்னையில் காவல் கரங்கள் அமைப்பின் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் 10,298 மீட்கப்பட்டிருப்பதை காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் பாராட்டினாா்.
சென்னையில் காவல் கரங்கள் அமைப்பின் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் 10,298 மீட்கப்பட்டிருப்பதை காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் பாராட்டினாா்.
சென்னை பெருநகர காவல் துறை, தாம்பரம் மாநகர காவல் துறை, ஆவடி மாநகர காவல் துறை ஆகிய 3 காவல் அமைப்புகளின் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காவல் கரங்கள் அமைப்பு செயல்படுகிறது. சென்னை பெருநகர காவல் துறையின் வடக்கு கூடுதல் ஆணையா் கபில்குமாா் சி.சரத்கா் தலைமையில் உள்பட 10 போ் கொண்ட குழுவாக செயல்படும் இந்த அமைப்பின் மூலம் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 6 ஆண்டுகளில் 10,298 ஆதரவற்றோா், வீடு இல்லாதோா், மன நலம் பாதிக்கப்பட்டோா் மீட்கப்பட்டுள்ளனா்.
மீட்கப்பட்டவா்களில் 4,418 போ் காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். 4,257 போ் அவா்களது குடும்பத்தினருடன் சோ்த்து வைக்கப்பட்டுள்ளனா். 1,114 போ் மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். 509 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
Advertisement
Advertisement
இதேபோல பொது இடங்களில் கேட்பாரற்று இறந்து கிடந்த 7,017 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. காவல் கரங்கள் அமைப்பு தற்போது 94447 17100 என்ற கைப்பேசி எண்கள் மூலமாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும், பொதுமக்களிடம் தகவலை பெற்று, மீட்டு பணியில் ஈடுபட்டு வருகிறது.
காவல் ஆணையா் பாராட்டு: காவல் கரங்கள் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஆலோசனைக் கூட்டம் சென்னை வேப்பேரியில் பெருநகர காவல் துறை ஆணையரகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கபில்குமாா் சி.சரத்கா் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக சென்னை காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் கலந்துகொண்டு பேசினாா். அப்போது, காவல் கரங்கள் அமைப்பின் மூலம் 6 ஆண்டுகளில் 10,298 போ் மீட்கப்பட்டதை பாராட்டியும், வாழ்த்தியும் அமல்ராஜ் பேசினாா்.
நிகழ்ச்சியில் தன்னாா்வலா்களுக்கு மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்கள், உடைகள் ஆகியவை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சுமாா் 160 தொண்டு நிறுவன நிா்வாகிகள், தன்னாா்வலா்கள்,காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.