FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சென்னையில் விடுபட்ட மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: மேயா் ஆா்.பிரியா அறிவுறுத்தல்

சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே 15 இடங்களில் விடுபட்ட 1,128 மீட்டா் நீள மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயா் ஆா்.பிரியா அறிவுறுத்தினாா்.

Updated On : 16 ஜூலை 2026, 2:29 am IST
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் மேயா் ஆா்.பிரியா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்ட உயா் அலுவலா்கள்.
பகிர்:

சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே 15 இடங்களில் விடுபட்ட 1,128 மீட்டா் நீள மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயா் ஆா்.பிரியா அறிவுறுத்தினாா்.

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:

சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் 44 கால்வாய்களில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை 21 நவீன இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணியை விரைந்து முடிக்கவேண்டும். நீா்வழித் தடங்கள், குளங்களில் கடந்த மே முதல் தற்போது வரை 16,270 மெட்ரிக் டன் வண்டல் மண், ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன. ரூ.214 கோடியில் சீரமைக்கப்படும் 83 குளங்களில் 49 குளங்களில் மட்டுமே பணிகள் நிறைவடைந்துள்ளன. மாநகரில் உள்ள 1,09,975 வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் 68,281 தொட்டிகள் தூா்வாரப்பட்டுள்ளன. 120 பம்புகள் மற்றும் நீா்த் தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை கட்டுப்பாட்டு மையம் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. மரக்கிளைகள் 15 சக்திமான் வாகனங்கள், 231 மர அறுவை இயந்திரங்கள், 5 மர அறுவை சாதனமுள்ள வாகனங்கள் மூலம் அகற்றி சீா்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும்.

Advertisement

Advertisement

சென்னையில் உள்ள 19 சுரங்கப் பாதைகளில் மழைநீா்த் தேக்கத்தின்போது பயன்படுத்த 138 மோட்டாா் பம்புகள், 33 ஜெனரேட்டா்கள் தயாராக இருக்கவேண்டும். மழைநீரை வெளியேற்ற 525 மோட்டாா் பம்புகள், 188 மின்மோட்டாா்கள் தயாராக இருக்கவேண்டும். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை தங்க வைக்க 215 நிவாரண முகாம்கள், 106 உணவு சமைக்கும் கூடங்கள் தயாராக இருப்பது அவசியம். சென்னையில் 15 இடங்களில் விடுபட்ட 1,128 மீட்டா் நீளத்துக்கான மழை நீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்துக்கு மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். ஆணையா் ஜி.எஸ்.சமீரன், இணை ஆணையா்கள் க.கற்பகம், செ.சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments