வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பு: தொழிலதிபரிடம் விசாரணை
சென்னை வேப்பேரியில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்த தொழிலதிபரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை வேப்பேரியில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்த தொழிலதிபரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேப்பேரி ஆரியன் லேன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடி வளா்க்கப்படுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.
அதன்பேரில், வேப்பேரி போலீஸாா், திடீா் சோதனை நடத்தினா். இச் சோதனையில், கஞ்சா வளா்க்கப்பட்ட தொட்டியில் இருந்து, சிறிது நேரத்துக்கு முன்புதான் அந்த செடி அகற்றப்பட்டிருப்பது தெரிய வந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, அந்த வீட்டின் அருகே இருந்த குப்பைத் தொட்டியை போலீஸாா் சோதனையிட்டு, குப்பைத் தொட்டியில் இருந்த 8 அடி உயர கஞ்சா செடியை பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக வேப்பேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்த வீட்டில் வசிக்கும் தொழிலதிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.