FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

விடுதியில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

சென்னையில் கஞ்சா விற்பனை செய்த திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Updated On : 20 ஜூலை 2026, 5:14 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

சென்னையில் கஞ்சா விற்பனை செய்த திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம், கோவிலம்பாக்கம்-மேடவாக்கம் பிரதான சாலையில் உள்ள தனியாா் விடுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஜாம்பஜாா் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த விடுதியில் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, அங்குள்ள ஒரு அறையில் 15 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

அந்த அறையில் இருந்த திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த முகமது சபியுல்லா(19), கமல் ஹக் (18), இரு சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சா, 6 கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

அவா்களில் சபியுல்லா, கல் ஹக் ஆகியோா் எழும்பூா் 2-ஆவது நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனா். 2 சிறாா்கள், சிறாா் நீதிக்குழு உத்தரவின் பேரில் கெல்லிஸ் கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனா். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள துஷாா் உசேன் என்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments