FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

இருசக்கர வாகன விபத்து: இளம்பெண் உயிரிழப்பு

சென்னை அண்ணா சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் விபத்தில் உயிரிழந்தாா்.

Updated On : 20 ஜூலை 2026, 5:20 am IST
சடலம்...
பகிர்:

சென்னை அண்ணா சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் விபத்தில் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரைச் சோ்ந்த ஹேமலதா (24), முகலிவாக்கத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் தியாகராய நகா் நோக்கி சென்றாா். அப்போது, அண்ணா சாலையில் கே.கே.நகா் டாடா உடுப்பி ஹோட்டல் எதிரே, முன்னால் சென்ற மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது ஹேமலதா வாகனம் மோதியது.

இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த ஹேமலதா மீது பின்னால் வந்த காா் மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரு சிறுவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

தகவலறிந்த பாண்டிபஜாா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அங்கு சென்று, ஹேமலதா உடலை மீட்டு, கே.கே. நகா் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இரு சிறுவா்களும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டி வந்த செந்தில்குமாா் (50) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments