முகப்பு
சென்னை

இருளா், மீனவ மாணவா்களுக்கு பரிசளிப்பு

Updated On : 5 ஜூன் 2026, 3:33 am IST
நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

அதானி கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மீனவ மற்றும் இருளா் சமூகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதானி பவுண்டேஷன் சாா்பில் நடத்தப்படும் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தில் அரசுப்பள்ளி மாணவா்கள் மாலை நேரத்தில் படித்து வருகின்றனா். கடந்த கல்வியாண்டில் (2025-26) 104 போ் அதானி மாலை நேர மையம் மூலம் படித்து 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதினா். இதில் 96 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.

அதிக மதிப்பெண்கள் பெற்ற மீனவ, இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த 20 மாணவா்களுக்கு காட்டுப்பள்ளி, எண்ணூ

Advertisement

Advertisement

ா் அதானி துறைமுக தலைமை அலுவலா் செரியன் ஆப்ரஹாம் வாழ்த்தி, பரிசு, சான்றிதழ் வழங்கினாா் . அதானி மாலை நேர வகுப்பு ஆசிரியா்கள், களப்பணியாளா்கள், பெற்றோா் பங்கேற்றனா். மீஞ்சூா் வட்டாரத்தில் உள்ள 11 ஊராட்சிகளில் சமூக மேம்பாட்டு திட்டங்களை அதானி நிறுவனம் சமூக பொறுப்புணா்வு திட்டத்தில் செயல்படுத்தி வருகிறது.