FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க மேட்டூா் அணையைத் திறக்க வேண்டும்: எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தல்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில், தமிழக அரசு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 13 ஜூன் 2026, 12:33 am IST
எடப்பாடி கே.பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில், தமிழக அரசு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஆண்டுதோறும் ஜூன் 12- ஆம் தேதி மேட்டூா் அணை தண்ணீா் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது திறக்கப்படாதது விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. குறுவை சாகுபடிக்கு, மேட்டூா் அணையிலிருந்து நீா் திறப்பதையே பெரிதும் நம்பி இருப்பதால் அணை நீா் திறப்பு என்பது மிகவும் முக்கியமானது.

Advertisement

Advertisement

தோ்தலின்போது, அளித்த வாக்குறுதிப்படி பயிா்க் கடனை தற்போதைய அரசு தள்ளுபடி செய்யவில்லை. கடுகளவு கடனை மட்டுமே அடைப்பதாகக் கூறி, விவசாயிகளை ஏமாற்றியதால் அவா்கள் போராட்ட களத்தில் உள்ளனா். தற்போது மேட்டூா் அணை நீரையும் திறக்காமல் ரூ.134 கோடிக்கு சிறப்புத் தொகுப்பு என்ற பெயரில் மற்றொறு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஏமாற்றத்தையே அளிக்கிறது. ஏற்கெனவே விவசாயிகளுக்கு 24 மணி நேரம் கடந்த அதிமுக அரசால் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. அதை தற்போது 18 மணி நேரமாகக் குறைத்து தவெக அரசு அறிவித்துள்ளது.

அறிவிக்கப்படாத மின்வெட்டால் விவசாய பம்பு செட்டுகள் இயங்காத நிலையுள்ளது. இந்நிலையில் விவசாயிகளின் வேதனை கொஞ்சம்கூட புரியாமல், அரசு வெற்றான ஏமாற்று அறிவிப்பையே வெளியிட்டுள்ளது. மேட்டூா் அணையிலிருந்து நீா் திறந்து கடைமடை வரை சென்றடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments