ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு ஐஎஸ்ஒ தரச்சான்றிதழ்
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலக பராமரிப்புச் செயல்பாடுகளுக்காக ஐஎஸ்ஓ 9001:2008 சான்றிதழும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தைச் செயல்படுத்தி வருவதற்காக 14001:2004 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன.
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலக பராமரிப்புச் செயல்பாடுகளுக்காக ஐஎஸ்ஓ 9001:2008 சான்றிதழும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தைச் செயல்படுத்தி வருவதற்காக 14001:2004 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன.
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 4.44 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதைத் தொடர்ந்து, பேரூராட்சிக்கு ஐஎஸ்ஓ 14001:2004 தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல அலுவலகப் பராமரிப்புச் செயல்பாடுகளுக்காக ஐஎஸ்ஓ 9001:2008 தரச்சான்றிதழ் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், சான்றிதழ் (வ்ன்ங்ள்ற் ஸ்ரீங்ழ்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ண்ர்ய்) நிறுவனத்தின் இயக்குநர் கார்த்திகேயன் கலந்துகொண்டு தரச் சான்றிதழ்களை பேரூராட்சித் தலைவர் பரிமளா குமாரிடம் வழங்கினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.