ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் இன்று ஜமாபந்தி தொடக்கம்
ஸ்ரீபெரும்புதூர் வட்டத்துக்கான ஜமாபந்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (மே 10) தொடங்குகிறது.
ஸ்ரீபெரும்புதூர் வட்டத்துக்கான ஜமாபந்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (மே 10) தொடங்குகிறது.
ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஒன்றியங்களை உள்ளடங்கிய ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில், ஸ்ரீபெரும்புதூர், வல்லம், படப்பை, மதுரமங்கலம், சுங்குவார்சத்திரம், தண்டலம், செரப்பணஞ்சேரி ஆகிய ஏழு குறுவட்டங்கள் உள்ளன.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 1427-ஆம் பசலிக்கான ஜமாபந்தி ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
மே 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஜமாபந்தியில், முதல் நாளான வியாழக்கிழமை படப்பை குறுவட்டத்துக்கு ஜமாபந்தி நடைபெற உள்ளது. சமூகப் பாதுகாப்பு தனித் துணை ஆட்சியர் தலைமையிலும், வட்டாட்சியர் ரமேஷ் முன்னிலையிலும் ஜமாபந்தி நடைபெறும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.