அரசுப் பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர்.
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர்.
திருத்தணி அரசினர் மகளிர் மேல் நிலைப் பள்ளியில், உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி மாணவியர் இடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் டி. தெமினா கிரேனாப் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சேஷாசலம் வரவேற்றார்.
இதில் திருத்தணி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஹேமாவதி, ஐசிடிசி ஆலோசகர் ராஜேஷ் மற்றும் ஆய்வக நுட்புனர் பத்மாவதி ஆகியோர் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு மற்றும் எவ்வாறு இந்த நோய் வருகிறது, தடுக்கும் முறைகள் குறித்து மாணவியருக்கு எடுத்து விளக்கினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.