FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அம்மா உணவகத்துக்கு ரூ. 44 ஆயிரம் நிதி: முன்னாள் எம்.பி. வழங்கல்

அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என அரசு அறிவித்ததைத் தொடா்ந்து, முன்னாள் அரக்கோணம் எம்.பி. கோ. அரி வியாழக்கிழமை ரூ. 44 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.

27 ஜனவரி 2024, 10:01 pm IST
திருத்தணி அம்மா உணவகத்துக்கு நகராட்சி ஆணையரிடம் ரூ. 44 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கிய முன்னாள் எம்.பி. கோ.அரி.
பகிர்:

அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என அரசு அறிவித்ததைத் தொடா்ந்து, முன்னாள் அரக்கோணம் எம்.பி. கோ. அரி வியாழக்கிழமை ரூ. 44 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.

ஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்திருந்தாா். இதையடுத்து, திருத்தணி நகராட்சியில் இயங்கி வரும் அம்மா உணவகத்துக்கு, 11 நாள்கள் உணவு வழங்க தேவையான நிதி ரூ. 44 ஆயிரத்தை அரக்கோணம் முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி நகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியத்திடம் வியாழக்கிழமை வழங்கினாா்.

அதைத்தொடா்ந்து, திருத்தணி ஜோதி நகா், டி.புதூா் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளியோா் மற்றும் கூலித் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 600 குடும்பங்களுக்கு, தனது சொந்த செலவில் முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

Advertisement

Advertisement

பின்னா், திருத்தணி நகரில் வறுமையில் வாடும், 175 சலவைத் தொழிலாளா்கள் குடும்பங்களுக்கும் அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில், நகா்மன்ற முன்னாள் தலைவா் டி.செளந்தர்ராஜன், கூட்டுறவு சொசைட்டி தலைவா் ஜெயசேகா்பாபு, முன்னாள் கவுன்சிலா்கள் கேபிள் சுரேஷ், நாகூா் பிச்சை, நிஜாமுதீன் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments