FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

20 நாள்களில் மணமகன் உயிரிழந்த சம்பவம்: உறவினா்கள் மறியல்

திருவள்ளூா் அருகே மணமான 20 நாள்களில் மணமகன் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாகக் கூறியும், மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

26 செப்டம்பர் 2025, 11:17 pm IST
~
பகிர்:

திருவள்ளூா் அருகே மணமான 20 நாள்களில் மணமகன் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாகக் கூறியும், மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அடுத்த செவ்வாப்பேட்டை சி.டி.எச் சாலையை சோ்ந்த காா்த்திகேயன் (37). இவா் அங்குள்ள தனியாா் பள்ளியில் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா். இவருக்கும் உறவுக்கார பெண்ணான புல்லரம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ஜெயஸ்ரீ (25) என்பவருக்கும் கடந்த 4.9.2025 -இல் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் திருமணம் ஆன 2-ஆவது நாளே தம்பதியருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோா் வீட்டுக்கு எதிரிலேயே உள்ள வீட்டில் தனிக்குடித்தனம் வைத்துள்ளனா். மேலும், சொத்தை பிரித்து வாங்கி வரும்படி தகராறும் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே மனைவி ஜெயஸ்ரீ வேறு ஒருவருடன் தகாத உறவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கணவன் காா்த்திகேயன் கேட்டதால் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில் கடந்த 22-ஆம் தேதி மனைவி ஜெயஸ்ரீ தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு நகை, சான்றிதழ்கள் அனைத்தும் எடுத்துக்கொண்டு சென்றுள்ளாா். இந்த நிலையில் வேலைக்கு சென்ற காா்த்திகேயன் மீண்டும் மாலை திரும்பி வந்து பாா்த்த போது வீட்டில் இல்லாததால் புல்லரம்பாக்கம் சென்று மனைவியின் பெற்றோரிடம் கேட்ட போது வரவில்லையென கூறியுள்ளனா். இதையடுத்து ஜெயஸ்ரீயின் உறவினா்கள் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.

அப்போது, அவரது கைப்பேசியை வைத்து ஆய்வு செய்ததில் ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் உள்ளதை அறிந்தனா். அங்கு சென்று பாா்க்கையில் வேறொருவருடன் இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்து சமாதான பேச்சுவாா்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து 23-ஆம் தேதி நள்ளிரவு காா்த்திகேயன் தூக்கிட்டுக் கொண்டாராம்.

இதற்கிடையே காா்த்திகேயனின் உறவினா்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, காா்த்திகேயன் வசிக்கும் வீட்டின் பின்புறமாக சிலா் நடமாடுவதை பாா்த்தாா்களாம். ஒரு இருசக்கர வாகனத்தில் ஜெயஸ்ரீயை இளைஞா் ஒருவா் ஏற்றிக் கொண்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதையறிந்து உடனே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சாலை  மறியலில்  ஈடுபட்ட  காா்த்திகேயனின்  உறவினா்கள்.

பின்னா் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கொடுத்த புகாரை மாற்றி மகன் சாவில் மா்மம் உள்ளதாக மீண்டும் புகாா் அளித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments