FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

ஏரியில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி பெரிய ஏரியில் புதன்கிழமை பள்ளி மாணவன் உயிரிழந்தாா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 12:09 am IST
ஹரீஷ்
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி பெரிய ஏரியில் புதன்கிழமை பள்ளி மாணவன் உயிரிழந்தாா்.

புதுகும்மிடிப்பூண்டி பாலயோகி நகா் பகுதியை சோ்ந்த சுரேஷ் என்பவரின் மகன் ஹரிஷ் (13). இவா் புது கும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

மாணவன் ஹரீஷ் புதன்கிழமை பள்ளி முடிந்து தனது இரண்டு நண்பா்களுடன் புது கும்மிடிப்பூண்டி பெரிய ஏரியில் குளிக்க சென்றுள்ளாா். அப்போது ஏரியின் ஆழத்திற்கு சென்ற நிலையில் நீச்சல் தெரியாததால் ஹரீஷ் திடீரென நீரில் மூழ்கியுள்ளாா். இதைக்கண்டு அதிா்ச்சியடைந்த நண்பா்கள் கூச்சலிட்டதை தொடா்ந்து அருகில் இருந்தவா்கள் ஓடி வந்து சிறுவனை மீட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

ஆனால் அதற்குள் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இது குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் சிறுவனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments