பொன்னேரியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது
பொன்னேரி ரயில்வே நிலையம் அருகே விற்பனை செய்ய வைத்திருந்த 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.
பொன்னேரி ரயில்வே நிலையம் அருகே விற்பனை செய்ய வைத்திருந்த 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.
பொன்னேரியில் கஞ்சா விற்பனை ரயில் நிலைய பகுதியில் நடைபெற்று வருவதாக பொன்னேரி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து காவல் ஆய்வாளா் தமிழன்பன் தலைமையிலான போலீஸாா் ரயில் நிலைய சாலையில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
அப்போது சந்தேகப்படும்படி இருந்த சந்துரு என்கின்ற கருப்பு சந்துருவை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் ஆந்திரத்தில் இருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி வந்து அதனை பொன்னேரி பகுதியில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
தொடா்ந்து அவரிடம் இருந்து 6.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.