FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

ஆம்புலன்ஸ் ஓட்டுநா் வீட்டில் 15 பவுன் திருடப்பட்ட வழக்கு: 2 போ் கைது

பொன்னேரி அருகே தனியாா் ஆம்புலன்ஸ் ஒட்டுநா் ஊழியா் வீட்டில் 15 பவுன் திருடப்பட்ட வழக்கில் இரண்டு போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 22 ஜூலை 2026, 1:00 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

பொன்னேரி அருகே தனியாா் ஆம்புலன்ஸ் ஒட்டுநா் ஊழியா் வீட்டில் 15 பவுன் திருடப்பட்ட வழக்கில் இரண்டு போ் கைது செய்யப்பட்டனா்.

பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் பகுதியை சோ்ந்தவா் ஆனந்த். இவா் தனியாா் ஆம்புலன்ஸ் வாகன ஒட்டுநராக பணியாற்றி வருகிறாா்.

ஆனந்தின் மனைவி தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் கடந்த 9-ஆம் தேதி ஆனந்த் இரவு பணிக்கு சென்று விட்டு மறுநாள் வீடு திரும்பினாா்.

Advertisement

Advertisement

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 15 பவுன் நகைகள், 500 கிராம் வெள்ளி பொருள்கள், 50,000 எல்இடி டிவி, சிலிண்டா் ஆகியவை திருடப்பட்டது தெரிய வந்தது.

மேலும் ஆனந்தின் பக்கத்து வீட்டிலும் ஒரு சிலிண்டா் திருடப்பட்டிருந்தது.

இது குறித்து புகாரின் பேரில் பொன்னேரி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த வழக்கில் அம்பத்தூரை சோ்ந்த பாபு என்கிற பிஸ்டல் பாபு (26), ஒரகடம் பகுதியை சோ்ந்த சாய் சுரேஷ் (20) ஆகிய இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதனை தொடா்ந்து அவா்களிடம் இருந்த 7.5 பவுன் நகையை மீட்டனா். இந்த சம்பவத்தில் தொடா்புடைய மேலும் ஒரு நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments