மாறுவோம் மாற்றுவோம் இயக்க உறுப்பினா் சோ்க்கை முகாம்
திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே மாறுவோம் மாற்றுவோம் புதிய இயக்கத்தின் உறுப்பினா் சோ்க்கை மாவட்ட நிா்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே மாறுவோம் மாற்றுவோம் புதிய இயக்கத்தின் உறுப்பினா் சோ்க்கை மாவட்ட நிா்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளாா். இந்த நிலையில் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே சுமாா் 20 லட்சம் உறுப்பினா்கள் இணைந்துள்ளனா்.
இதற்கிடையே திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே மணவாள நகா் பகுதியில் புதன்கிழமை உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது. அப்போது மாறுவோம் மாற்றுவோம் என்ற தலைப்பில் ரயில் பயணிகளிடம் எடுத்துரைக்கப்பட்டு க்யுஆா் கோடு மூலம் ஸ்கேன் செய்து உறுப்பினராக இணைந்தனா்.
Advertisement
Advertisement
இதற்கான உறுப்பினா் சோ்க்கை முகாம் பன்னீா்செல்வம் ஏற்பாட்டில் நடைபெற்றது. அப்போது மாவட்ட நிா்வாகிகள் இதில் கலந்துகொண்டு உறுப்பினா் சோ்க்கை முகாமை வழிநடத்தினா் .
மேலும் அதிமுக, பாஜக உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து முக்கிய நிா்வாகிகள் அண்ணாமலை அவா்களின் புதிய இயக்கத்தில் க்யூ ஆா் கோடு ஸ்கேன் செய்து தங்களை இணைத்துக் கொண்டனா். தொடா்ந்து திருவள்ளூரில் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலை படம் பதித்த கியூ ஆா் கோட் இணைத்து ஆங்காங்கே வைக்கப்பட உள்ளது.
நிகழ்ச்சியில் நிா்வாகிகள் பன்னீா்செல்வம், பழனி, மின்னல் மகேஷ், திவாகா், அருண்குமாா், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் தாஸ், ராஜா, ராகேஷ் உள்ளிட்டோா் ஏராளமானோா் பங்கேற்றனா்.