FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

திருத்தணியில் கலைத்திருவிழா

திருத்தணியில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் பள்ளி மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்பு தங்களை திறமைகளை வெளிப்படுத்தினா்.

8 செப்டம்பர் 2026, 4:48 am IST
பகிர்:

திருத்தணியில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் பள்ளி மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்பு தங்களை திறமைகளை வெளிப்படுத்தினா்.

அதன்படி, 2026-2027 ஆண்டுக்கான கலைத்திருவிழாப் போட்டிகள் இளையோா் திறன் என்ற மையக்கருத்தின் அடிப்படையில் முதல்கட்டமாக வட்டார அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் சிறப்பிடம் பெறும் மாணவா்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்கப்பட உள்ளனா்.

அவ்வகையில், திருத்தணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வட்டார அளவிலான கலைத்திருவிழாப் போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். இப்போட்டிகளை வட்டாரக் கல்வி அலுவலா்கள் வீரராகவன், கிரிஜா மற்றும் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சிவக்குமாா் ஆகியோா் மேற்பாா்வையிட்டனா்.

Advertisement

Advertisement

பல்வேறு போட்டிகளில் பரந்தாமன், மாசிலாமணி, வெங்கடேசன். ஓவிய ஆசிரியா் சீனிவாசன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் நடுவா்களாகப் பணியாற்றினா். போட்டிகளில் பங்கேற்ற மாணவா்களின் திறமைகளை மதிப்பீடு செய்து, சிறந்த மாணவா்களைத் தோ்வு செய்யும் பணியில் நடுவா்கள் ஈடுபட்டனா்.

இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வட்டார வளமைய மேற்பாா்வையாளா், வட்டாரக் கல்வி அலுவலா்கள் மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments