FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

சண்முகா அரசுப் பள்ளிக்கு 6 தங்கப் பதக்கங்கள்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கான துப்பாக்கிச் சுடுதல், பாட்டுப் போட்டி ஆகியவற்றில் திருவண்ணாமலை

Updated On : 26 ஜூன் 2018, 9:25 am IST
பகிர்:

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கான துப்பாக்கிச் சுடுதல், பாட்டுப் போட்டி ஆகியவற்றில் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் 6 தங்கப் பதக்கங்களை வென்றனர்.
காஞ்சிபுரத்தில் ஜூன் 11 முதல் 20-ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டிகள் நடைபெற்றன. 
இந்தப் போட்டியில், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் 18 பேர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற பாட்டுப் போட்டி, குழு நடனப் போட்டிகளில் 21 பள்ளிகள், 9 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் துப்பாக்கிச் சுடுதல், பாட்டு, குழு நடனம் ஆகியவற்றில் முதலிடம் பிடித்து 6 தங்கப் பதக்கங்களை வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள், பயிற்றுவித்த பள்ளியின் தேசிய மாணவர் படை அலுவலர் விஜய் ஆனந்த் ஆகியோரை பள்ளித் தலைமை ஆசிரியர் ஒய்.ஜெயராஜ் சாமுவேல் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments