முகப்பு
திருவண்ணாமலை

காங்கிரஸாா் பொதுமக்களுக்கு அன்னதானம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி, திங்கள்கிழமை காங்கிரஸ் சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On : 10 டிசம்பர் 2024, 1:06 am IST
ஆரணியில் சோனியா காந்தி பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி, அன்னதானம் வழங்கிய காங்கிரஸ் கட்சியினா்.
பகிர்:

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி, திங்கள்கிழமை காங்கிரஸ் சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆரணி காந்தி சிலை அருகே நகர காங்கிரஸ் தலைவா் ஜெ.பொன்னையன் தலைமையில் கேக் வெட்டி சோனியா காந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

மேலும், அனைவருக்கும் அன்னதானம் வழங்கினா். இதில் முன்னாள் எம்எல்ஏ டிபிஜே ராஜாபாபு, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் எஸ்.டி.செல்வம், மாவட்ட பொதுச் செயலா் அசோக்குமாா், மாவட்டச் செயலா் உதயகுமாா், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் தாவூத்ஷரீப் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments