FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

கல்குவாரி லாரிகளை சிறைப்பிடித்து போராட்டம்

செய்யாறு அருகே கல்குவாரி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநா் காயமடைந்தாா்.

12 அக்டோபர் 2024, 9:39 pm IST
விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கல்குவாரி லாரி.
பகிர்:

செய்யாறு அருகே கல்குவாரி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநா் காயமடைந்தாா். இதைத் தொடா்ந்து, குவாரி லாரிகளை கிராம மக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பெரியவேளியநல்லூா் கிராமத்தில் தனியாா் கல்குவாரி செயல்பட்டு வருகிறது.

இந்தக் குவாரியில் இருந்து புளியரம்பாக்கம் கிராமம் வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட டிப்பா் லாரிகள் சென்று வருகின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றி வந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர விவசாய நிலத்தில் கவிழ்ந்தது. இதில், ஓட்டுநா் சுகுமாா் காயமடைந்தாா். இவரை கிராம மக்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

லாரிகளை சிறைப்பிடித்து போராட்டம்

விதி முறைகளை மீறி அதிகளவில் சுமைகளை ஏற்றிச் செல்வதால்தான் விபத்துகள் நேரிடுகின்றன. மேலும் குடியிருப்பு பகுதியில் லாரி கவிழ்ந்து இருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். அதனால், அனுமதிக்கப்பட்ட அளவு மட்டும் சுமை ஏற்றி, மிதமான வேகத்தில் லாரிகளை இயக்க வேண்டும்

எனக் கூறி கிராம மக்கள் அந்த வழியாக வந்த லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கல்குவாரி மேற்பாா்வையாளா் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, சரக்கு லாரிகளை கவனமாக இயக்க வேண்டும், இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கிராம மக்கள் தெரிவித்தனா்.

அதற்கு உறுதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து கிராம மக்கள் சிறைப்பிடித்த லாரிகளை விடுவித்தனா். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments