FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

பெட்டிக் கடையில் ரூ.60 ஆயிரம் திருட்டு

வந்தவாசி அருகே பெட்டிக் கடையின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On : 23 டிசம்பர் 2025, 6:13 am IST
பகிர்:

வந்தவாசி: வந்தவாசி அருகே பெட்டிக் கடையின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த காவணியாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ். இவா் அந்தக் கிராமத்தில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறாா்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இவா் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். பின்னா், புதன்கிழமை காலை சென்று பாா்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது இவருக்குத் தெரிய வந்தது. மேலும் கடையில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம் பணம் திருடு போயிருந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments