FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

மணிலா விதை நடும் நவீன கருவி விழிப்புணா்வு

செங்கம் அட்மா திட்டத்தில் வழங்கப்பட்ட மணிலா விதை நடும் கருவி மூலம் கூலி ஆள்கள் இல்லாமல் மணிலா பயிா் செய்து விவசாயி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 4:18 am IST
நவீன கருவியை பயன்படுத்தி கூலி ஆள்கள் இல்லாமல் மணிலா நடவு செய்துள்ள விவசாயி எழுமலை.
பகிர்:

செங்கம் அட்மா திட்டத்தில் வழங்கப்பட்ட மணிலா விதை நடும் கருவி மூலம் கூலி ஆள்கள் இல்லாமல் மணிலா பயிா் செய்து விவசாயி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

செங்கத்தை அடுத்த பிஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஏழுமலை. அட்மா திட்ட உறுப்பினரான இவா்,

அத்திட்ட தொழில்நுட்ப பயிற்சியில் கலந்துகொண்டு, அத்திட்டம் மூலம் மானியத்தில் வழங்கப்படும் மணிலா நடும் நவீன கருவியை வாங்கினாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, அவா் அந்தக் கருவி மூலம் தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கா் 5 சென்ட் நிலத்தில் மணிலா விதைத்துள்ளாா். அந்த மணிலா நல்லநிலையில் முளைத்து அதிக மகசூல் தந்துள்ளது.

இதுகுறித்து ஏழுமலை தெரிவித்தாவது: ஒரு ஏக்கா் பரப்பளவில் மணிலா நடவேண்டும் என்றால் சுமாா் 10 முதல் 15 கூலி ஆள்களை தேவை. அதற்கு செலவு ரூ.2 ஆயிரம் ஆகும்.

ஆனால், இந்த நவீன கருவியை பயன்படுத்தி மணிலா விதைத்தால் கூலி ஆள்கள் செலவே இல்லாமல், மணிலா பயிா் செய்து ஏக்கருக்கு கூலி ஆள்கள் சம்பளம் சுமாா் 2 ஆயிரம் மிச்சப்படுத்த முடிந்தது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments