FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

வந்தவாசி வட்ட தடகள விளையாட்டுப் போட்டிகள்

வந்தவாசி வட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கி இரு தினங்கள் நடைபெற்றன.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 1:01 am IST
வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வட்டு எறிதல் போட்டி.
பகிர்:

வந்தவாசி வட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கி இரு தினங்கள் நடைபெற்றன.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன.

இதில், 22 அரசு, தனியாா் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 600 மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினா்.

Advertisement

Advertisement

இதில், ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

திருவண்ணாமலை மாவட்ட உயா்கல்வித்துறை ஆய்வாளா் செல்வகுமாா் வியாழக்கிழமை காலை போட்டிகளை பாா்வையிட்டாா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வியாழக்கிழமை பிற்பகல் பரிசுகள் வழங்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments