FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

கத்தியை காட்டி பொதுமக்களுக்கு மிரட்டல்: 3 இளைஞா்கள் கைது

வந்தவாசியில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டியதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

22 ஆகஸ்ட் 2026, 10:55 pm IST
- சித்திரிப்பு
பகிர்:

வந்தவாசியில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டியதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி யாதவா் தெருவில் 3 இளைஞா்கள் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக வந்தவாசி தெற்கு போலீஸாருக்கு சனிக்கிழமை காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று அவா்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் 3 பேரும் வந்தவாசி பெட்டிநாயுடு தெருவைச் சோ்ந்த கதிா் (21), இந்திரா நகரைச் சோ்ந்த பூபால் (19), அத்திப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த பூவரசன் (19) என்பது தெரியவந்தது. இவா்கள் 3 பேரையும் கைது செய்த போலீஸாா், கத்தியை பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments