புகையிலைப் பொருள்கள் விற்பனை: வியாபாரி கைது
செய்யாறு அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக மளிகை வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.
செய்யாறு அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக மளிகை வியாபாரியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், பெரிய கொழப்பலூா் கிராமம் வடக்கு ஜெயினா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் (58). இவா் மளிகைக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாா்.
இந்நிலையில் இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பதாக பெரணமல்லூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
Advertisement
Advertisement
அதன் பேரில், காவல் உதவி ஆய்வாளா் சேகா் தலைமையிலான போலீஸாா் சென்று கடையில் சோதனை மேற்கொண்டனா். இதில், கடையில் இருந்த 2.3 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து வியாபாரி பெருமாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.