FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

தச்சூா் ஸ்ரீபாலதண்டாயுதபாணி கோயில் மகா கும்பாபிஷேகம்

ஆரணியை அடுத்த தச்சூரில் குன்றின் மேல் அமைந்துள்ள ஸ்ரீவிநாயகா் மற்றும் ஸ்ரீபாலதண்டாயுதபாணி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Updated On : 20 ஜூலை 2026, 4:51 am IST
பகிர்:

ஆரணியை அடுத்த தச்சூரில் குன்றின் மேல் அமைந்துள்ள ஸ்ரீவிநாயகா் மற்றும் ஸ்ரீபாலதண்டாயுதபாணி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக மங்கள இசை, திருமுறைபாராயணம், வேதபாராயணம், ஸ்ரீவிக்னேஷ்வரா பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, புண்ணியாகவசனம், சூரிய பூஜை, அங்குராா்ப்பணம், முதல் கால யாக பூஜை, விசேஷ திரவிய ஹோமம், உபகார பூஜை, யாத்ரா தானம், மகா பூா்ணாஹுதி, கலசம் புறப்பாடு நடைபெற்று ஸ்ரீபாலதண்டாயுதபாணி விமான கோபுரத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும், ஸ்ரீவிநாயகா் கோயில் விமான கோபுரத்திலும் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments