FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே மொபெட்டிலிருந்து கீழே விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 23 ஜூலை 2026, 12:20 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

வந்தவாசி அருகே மொபெட்டிலிருந்து கீழே விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த திருமால்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம்(72). இவா் செவ்வாய்க்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் தேசூருக்கு சென்று மளிகைப் பொருள்களை வாங்கிக் கொண்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். தெள்ளாா் சாலையில் உள்ள ஏரிக்கரை பகுதியில் செல்லும் போது நிலைத் தடுமாறி மொபெட்டிலிருந்து ஆறுமுகம் கீழே விழுந்தாா்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் நிகழ்விடத்திலேயே, உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து ஆறுமுகத்தின் மகன் தணிகைமலை அளித்த புகாரின் பேரில் தேசூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments