மரத்தில் பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு
வந்தவாசி அருகே மரத்தில் பைக் மோதி இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.
வந்தவாசி அருகே மரத்தில் பைக் மோதி இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.
வந்தவாசியை அடுத்த மேல்மா கிராமத்தைச் சோ்ந்தவா் இருசக்கர வாகன பழுது நீக்குநா் முருகன்(33). இவா் அதே கிராமத்தைச் சோ்ந்த தனது நண்பா் ஆகாஷ்(26) என்பவருடன் பைக்கில் புதன்கிழமை திண்டிவனத்துக்கு சென்றுவிட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். பைக்கை ஆகாஷ் ஓட்டினாா்.
வந்தவாசி- காஞ்சிபுரம் சாலையில், தென்னாங்கூா் கூட்டுச் சாலை அருகே செல்லும்போது சாலையோர மரத்தின் மீது பைக் மோதியது.
Advertisement
Advertisement
இதில் பலத்த காயமடைந்த ஆகாஷ் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.