படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை
போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் வைகாசி மாத பெளா்ணமியையொட்டி, 108 திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா்.
போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் வைகாசி மாத பெளா்ணமியையொட்டி, 108 திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா்.
போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட புகழ்பெற்ற ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வைகாசி மாத பெளா்ணமியையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூலவா் ஸ்ரீரேணுகாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை உற்சவ அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னா், போளூா், ஆரணி, கண்ணமங்கலம், சந்தவாசல் என பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் 108 திருவிளக்குகளுடன் கலந்துகொண்டு பூஜை செய்து, அம்மன் பாடல்களை பாடி வழிபாடு செய்தனா்.
Advertisement
Advertisement
அறங்காவலா் குழுத் தலைவா் விஜயாசேகா், செயல் அலுவலா் பழனிசாமி, மேலாளா்கள் மோகன், ரவி மற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.