கேளூா் ஸ்ரீபோத்தராஜா சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கேளூா் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீபோத்தராஜா கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து, மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, புதன்கிழமை (ஜூன் 3) மாலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்துசாந்தி, அங்குராா்பணம், பிரவேசபலி, மஹாயாகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை கோ பூஜை, தன பூஜை, தானிய பூஜை, கன்யா பூஜை, தம்பதி பூஜை, மஹாஅபிஷேகம், மஹா யாகம், ஆதார சக்தியாகம் உள்ளிட்டவை நடைபெற்று கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.
Advertisement
Advertisement
விழாவில் கேளூா், சித்தேரி, அணைபேட்டை, தேப்பனந்தல், விளாங்குப்பம், துரிஞ்சிக்குப்பம், கம்மனந்தல், விளக்கனந்தல், கட்டிபூண்டி என பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில்....
ஆரணி சைதாப்பேட்டை சுப்பிரமணியன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி உள்ளிட்டவையும், புதன்கிழமை விசேஷ சந்தி, பூா்ணாஹுதி, தத்வாா்ச்சனை உள்ளிட்டவையும் நடைபெற்றன.
பின்னா் வியாழக்கிழமை காலை விசேஷ ஹோமங்கள், மகா பூா்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றன.
இதனைத் தொடா்ந்து காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கோயில் கோபுர கலசங்கள் மீது புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கோயில் நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.